உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணம்

உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணம்
உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணம்

சேலம் ஆற்றின் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் 16 கண் மதகு வழியாக உபரிநீர் செல்லும் ஆற்றின் குட்டையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் மணிகண்டன், மோகன், ராஜா, தமிழரசன் ஆகியோர் உயிரிழந்தனர். 

இதுகுறித்து அறிந்த போது மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com