"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்..." - முதல்வர் பழனிசாமி

"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்..." - முதல்வர் பழனிசாமி
"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்..." - முதல்வர் பழனிசாமி

"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன்பிறகு அதுபற்றி பதில் கூறுகிறேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சித் தொடங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு, "அவர் (ரஜினி) முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அறிவிப்பை மட்டும்தானே வெளியிட்டுள்ளார். அவர் கட்சியைப் பதிவு செய்த பிறகு, அதுபற்றி பதில் தருகிறேன். அவர் தன்னுடையைக் கருத்தைதான் சொல்லியிருக்கிறார். கற்பனையான விஷயம் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது" என்றார்.

முன்னதாக, அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமையும் என தெரிவித்திருந்தார்.

ஆனால், ஓபிஎஸ் பேசியது அதிமுக-வின் கருத்து அல்ல எனவும், அது அவரது சொந்த கருத்து எனவும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com