கோமுகி அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கோமுகி அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கோமுகி அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
Published on

விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 22-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நீர் திறப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பழைய, புதிய பாசன நிலங்களுக்காக நீர் திறக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை செய்து உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் அவர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com