குடும்பத்தினருடன் வருகைதந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

குடும்பத்தினருடன் வருகைதந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

குடும்பத்தினருடன் வருகைதந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
Published on

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் நடந்தே சென்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com