தமிழ்நாடு
ஆழியாறு அணையிலிருந்து நீர்த் திறக்க முதலமைச்சர் உத்தரவு
ஆழியாறு அணையிலிருந்து நீர்த் திறக்க முதலமைச்சர் உத்தரவு
கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1059 கன அடி நீர்த் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீர்த் திறப்பால், 6,400 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாய் பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆழியாறு 5 பழைய வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு டிச.31 வரை நீர் திறக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.