புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் எனவும், அதில் முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

பொதுவாக நிவாரணம் வழங்கும்போது 3 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளை கணக்கெடுத்துத்தான் நிவாரணம் அளிப்பார்கள். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசு, கடந்த 6 மாதங்களாகப் பெறப்பட்ட 2,14,950 புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் எனவும், அவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான தொகையாக 42,99,00,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com