கரூரில் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் மாயம்

கரூரில் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் மாயம்

கரூரில் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் மாயம்

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த விகாசினி, யாசிகா என்ற பள்ளி மாணவிகள் வீட்டிற்கு திரும்பாததால் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர்கள் விகாசினி - யாசிகா. இவர்கள் இங்குள்ள வெங்கமேடு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் வகுப்பு முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவிகளை பெற்றோர் பல இடங்களில் தேடியும் தகவல் தெரியததால், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்‌ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக மாணவிகள் படிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com