தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையால் காதை கடித்து துப்பிய நபர்

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையால் காதை கடித்து துப்பிய நபர்

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையால் காதை கடித்து துப்பிய நபர்
Published on

திருச்சி பெரிய மிளகுப் பாறையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், மகேந்திரன் என்பவரின் காதை கடித்து துப்பிய ரெங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மகேந்திரன் பெயிண்டராக உள்ளார். ரெங்கராஜ், கேனில் தேநீர் விற்று வருகிறார். மாநகராட்சி குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காத்திருந்தனர். அப்போது, 10 குடங்களுடன், மகேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது, ரெங்கராஜ் வரிசையில் நிற்காமல் தண்ணீர் பிடிக்க முயன்றுள்ளார். இதுகுறித்த கேட்டபோது, மகேந்திரனுக்கும், ரெங்கராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், தகராறு முற்றி கைகலப்பாக மாறியதுடன், இருவரும் அடித்துக்கொண்டு சாலையில் உருண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரெங்கராஜ், திடீரென யாரும் எதிர்பாராத தருணத்தில், மகேந்திரனின் காதை கடித்து துப்பினார். இதையடுத்து, மகேந்திரன் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்த திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய காவலர்கள், ரங்கராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com