நாம் தமிழர், பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு

நாம் தமிழர், பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு

நாம் தமிழர், பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு
Published on

தேனி மாவட்டம் போடியில் நீட் விவகாரம் மற்றும் பிரதமர் மோடி குறித்து பேசியதால் நாம் தமிழர் கட்சியினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கு‌ம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம், போடி வள்ளுவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த தெருமுனை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை பேசினர். இதனிடையே, கூட்டத்தில் நீட் தேர்வு பற்றியும் பிரதமர் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் 50க்கும் மேற்ப்பட்டோர், நாம் தமிழர் கட்சியினருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கோசங்கள் எழுப்பினர். 

இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினரை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கு‌ம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com