நெல்லை: 20% போனஸ் வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நெல்லை: 20% போனஸ் வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நெல்லை: 20% போனஸ் வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“ அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து தொழிலாளர் சங்கத்தோடு ஜனநாயக பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவித்து - அதிமுக அரசின் நிலையை தொடர்கிறது இந்த அரசு” எனக் கூறி, அதை கண்டித்து நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘தீபாவளி போனஸாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வழங்க வேண்டும் - மத்திய அரசு பொதுத்துறை தொழிலாளர்களுக்கு வழங்குவது போல தமிழகத்திலும் போனஸ் 20% வழங்க வேண்டும் - டிஏ உயர்வு அரியர் போனஸ் நிலுவை உள்ளிட்டவை வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதி கூறும்போது, “அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 20% வழங்க வேண்டும். டிஏ உயர்வு நிலுவைத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோம்” என தெரிவித்தார். திமுக அரசின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரே திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com