சின்னமனூர்: சாலையில் வலம் வந்த அரியவகை நட்சத்திர ஆமை

சின்னமனூர்: சாலையில் வலம் வந்த அரியவகை நட்சத்திர ஆமை
சின்னமனூர்: சாலையில் வலம் வந்த அரியவகை நட்சத்திர ஆமை

சின்னமனூர் நகர்பகுதி சாலையில் வலம்வந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அதை பார்த்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் ஆமையை பிடித்து சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் இது குறித்து சின்னமனூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனச்சரகர் சிவாஜி தலைமையிலான வனத் துறையினர் ஆமையை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதையடுத்து பிடிபட்டது அரியவகை நட்சத்திர ஆமை என்றும் இங்குள்ள வனப்பகுதியில் அதிகளவில் இந்த ஆமைகள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com