மாமல்லபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்! சாலையில் பலத்த பாதுகாப்பு

மாமல்லபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்! சாலையில் பலத்த பாதுகாப்பு
மாமல்லபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்! சாலையில் பலத்த பாதுகாப்பு

சீன அதிபர் ஸி ஜின்பிங் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார். இதனால் அந்த சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொகுசு காரில் ஜின்பிங் கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் சில மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு தற்போது மாமல்லபுரம் புறப்பட்டுள்ளார். 

சென்னை ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையில் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com