கலந்தாய்வு மூலம் சென்னை காவல்துறையினரின் வாரிசுகள் 81 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை

கலந்தாய்வு மூலம் சென்னை காவல்துறையினரின் வாரிசுகள் 81 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை
கலந்தாய்வு மூலம் சென்னை காவல்துறையினரின் வாரிசுகள் 81 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை

சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் மகன்-மகள்கள் 81 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற பணிநியமன ஆணையை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.

படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வரும் போலீசாரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம், வேலை வாய்ப்பு முகாம் மற்றும் நேர்முக தேர்வு நடத்தி தனியார் நிறுவனங்களில் கல்வித்தகுதிக்கேற்ப வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 81 காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரும் ஐஏஎஸ் அதிகாரியுமான வீரராக ராவ் பங்கேற்று பணிநியமன ஆணை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் பேசுகையில், "சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் மகன்கள், மகள்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலையை பெற்று கொடுப்பதற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். கல்லூரி படித்து முடித்து வந்தவுடன் மாணவ- மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறோம்.

துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம். 10,664 பேருக்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வேலைவாய்ப்பு பெற்று கொடுத்துள்ளோம். காவல்துறையினரை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களது குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினோம். இளைஞர்களுக்கு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து அளித்து வருகிறோம்" என்று பேசினார்.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசுகையில், "காவல்துறையினரின் குடும்ப நலன் முக்கியமானது. 24 மணி நேரமும் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க முடியாது. தற்போது 81 பேருக்கு பணி கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர் தான். காவல்துறை மீதான ஈடுபாடு, நேர்மை, உழைப்பு ஆகியவை தான் தங்களுடைய குழந்தைகளுக்கு பணி கிடைக்க காரணம். காவல்துறையினர் தங்களின் உயிரை கூட துச்சமென நினைத்து பணி செய்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் 81 பேருக்கு பணி கிடைத்து இருப்பது பெரிய விஷயம். காவல்துறையினரின் குடும்ப நலனை நாங்கள் பார்த்து கொண்டால் பணியில் இருப்பவர்கள் இன்னும் முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியை செய்வார்கள். புயல் காலத்தில் மக்களுக்கு சிறப்பான போலீசாருக்கு பணி செய்துள்ளனர். செல்போன் திருடனை துரத்தி பிடித்த உதவி ஆய்வாளர் ரியல் ஹீரோ. உங்களுக்கு இது தொடக்கம். நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யுங்கள். காவல்துறையினர் குடும்பம் என்பதால் தனியார் நிறுவனத்தினர் உங்களை நம்புகின்றனர். நம்பிக்கை காப்பாற்றுங்கள்" என்று பேசினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், அமல்ராஜ், தேன்மொழி, இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com