தோண்டப்பட்டக் குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்!

தோண்டப்பட்டக் குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்!
தோண்டப்பட்டக் குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்!

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக இதுவரை தோண்டப்பட்ட குழிக்குள், ஆய்வு செய்வதற்காக தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கியுள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் தொடர்ந்து குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.  தற்போது 45 அடி வரை குழி தோண்டப் பட்டுள்ளது. 

தோண்டப்பட்டதை ஆய்வு செய்வதற்காகத் தீயணைப்புப் படை வீரர் ஒருவர், கயிறு கட்டி குழிக்குள் இறங்கினார். அவர் குறியீடு செய்துவிட்டு வெளியே வந்தார். இதையடுத்து பாறைகளை உடைக்க போர்வெல் மூலம் துளையிடப்பட்டு வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com