சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..!

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..!

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..!
Published on

கோவையில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ராமநாதபுரம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய அதேப்பகுதியில் உள்ள மற்றொரு தெருவான அம்மன் குளத்தை சேர்ந்த ஜோஸ்வா(29) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, கடந்த 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை மீட்டதுடன், ரவுடி ஜோஸ்வாவை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா மீது 3 கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா, காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்ததால் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜோஸ்வா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கிழக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com