திருவாரூர் அருகே இரண்டு சிறுமிகள் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை

திருவாரூர் அருகே இரண்டு சிறுமிகள் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை

திருவாரூர் அருகே இரண்டு சிறுமிகள் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை
Published on

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இரண்டு சிறுமிகள் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கனகம், சகுந்தலா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com