முட்புதரிலிருந்து கேட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல்.. மருத்துவமனைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

முட்புதரிலிருந்து கேட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல்.. மருத்துவமனைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்
முட்புதரிலிருந்து கேட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல்.. மருத்துவமனைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

சென்னையைடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தின் கொளப்பாக்கம் பகுதியில் பிறந்த சில நாள்களேயான பச்சிளம் ஆண்குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே கொளப்பாக்கம் பகுதியில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில்  இருந்து மீட்கப்பட்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கும் ஓட்டேரி காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் .

அதன் பேரில் 108 ஆம்புலன்சை ஓட்டுநர் உதயராம்குமார் துரிதமாக கொண்டு வந்தார். உடன் வந்த மருத்துவ உதவியாளர் சிவநேசன் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரையின் பேரில் முட் புதரிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com