சிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து

சிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து

சிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து
Published on

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், சிறையில் உள்ள 16 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைதானவர்கள் மீது குண்ட‌ர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் ஒருவர் மட்டும், தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 40 நாட்களுக்கு பின்னரே இந்தச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேர் தொடர்பான சாட்சியங்களையும், ஆதாரங்களையும், சேகரிக்க தாமதமாகி விட்டது என்ற காவல்துறையின் விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால், சிறையில் உள்ள 16 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com