சிறுமி கருக்கலைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

சிறுமி கருக்கலைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
சிறுமி கருக்கலைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய வழக்கில், சிறுமியை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 13-வது சிறுமிக்கு கடந்த 5 மாதங்களுக்குமுன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்தவர் குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், 12 வார கருவை சுமந்துள்ள அச்சிறுமிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதால், கருக்கலைப்புக்கு அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி சிறுமியின் தற்போதைய உடல்நிலையை பரிசோதித்து, அதன் அறிக்கையை நாளை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com