\
சென்னை கொண்டுவரப்பட்டார் கொலைக் குற்றவாளி தஷ்வந்த்

சென்னை கொண்டுவரப்பட்டார் கொலைக் குற்றவாளி தஷ்வந்த்

சென்னை கொண்டுவரப்பட்டார் கொலைக் குற்றவாளி தஷ்வந்த்
Published on

சிறுமி ஹாசினி, தனது தாயை கொலை செய்த வழக்கில் மும்பைக்கு தப்பிச் சென்ற குற்றவாளி தஷ்வந்த் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஹாசினியை கொன்ற கொலைக் குற்றவாளியான தஷ்வந்த் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். செலவுகளுக்கு பணம் தர மறுத்த தாய் சரளாவை கடந்த 2-ஆம்
தேதி அடித்துக் கொலை செய்த தஷ்வ்ந்த்,  வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளுடன்‌ தப்பிச் சென்றார். பின்னர்,  பெங்களூருவுக்கும், அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்று தஷ்வந்த் தலைமறைவானார். 

இதையடுத்து மும்பை சென்ற தமிழக தனிப்படை போலீசார், செப்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கடந்த 6-ஆம்‌தேதி கைது செய்‌தனர். கைதான பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய தஷ்வந்த் அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் தஷ்வந்த் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், மும்பையில் இருந்து தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். போலீஸ் காவல் முடிந்தது டிசம்பர் 12-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்த உள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com