குழந்தையை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை
குழந்தையை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகப்பேரை சேர்ந்தவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

சென்னை முகப்பேரில் கடந்த 2012ல் கடைக்கு சென்ற 4 வயது பெண் குழந்தையை மணிகண்டன் என்பவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன், மணிகண்டனுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். 

மேலும், இயற்கைக்கு மாறாக வன்கொடுமை செய்ததாக 10 ஆண்டுகளும், உடலில் காயங்கள் ஏற்படுத்தியது, பொது மக்களை கற்கள் கொண்டு தாக்கியது, குழந்தைக்கு மது கொடுத்து வன்கொடுமை செய்தது என்பன உள்ளிட்ட குற்றங்களுக்கும் சேர்த்து மொத்தம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அத்துடன் ரூ.8000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்குமாறும் தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com