6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை: முதல்வர் ஸ்டாலின்

6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை: முதல்வர் ஸ்டாலின்

6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை: முதல்வர் ஸ்டாலின்
Published on

கொரோனா அதிகரித்து வரும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மருத்துவ கட்டமைப்பை பயன்படுத்தி, படுக்கை வசதிகள் கிடைப்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் விவாதித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு மாவட்டங்களில் 18முதல் 44வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திட செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com