“இணையதள வசதியால் அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இணையதள வசதியால் அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
“இணையதள வசதியால் அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது என டிஎஸ்பிக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

சென்னை வண்டலூரில் டிஎஸ்பிக்களின் பயிற்சி அணிவகுப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 40 பெண்கள், 46 ஆண்கள் என 86 டிஎஸ்பிக்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது உரையாற்றிய அவர், ‘’காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டபோது எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது. மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுப்பது இன்றைய மிக முக்கிய தேவையாக உள்ளது. இணையதள வசதியால் அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இணையம்மூலம் பாலியல், நிதி சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

அரசாங்கத்தில் உள்ள எத்தனையோ துறைகளில் காவல்துறையும் ஒன்று என்று நீங்கள் நினைக்கக்கூடாது. ஒரு அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதியைத்தான்; அந்த பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. காவல்துறையை நவீனமாக்கியதில் திமுகவுக்கு முக்கியப்பங்கு உண்டு. சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால்தான் தொழில்கள் சிறக்கும். குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்கவேண்டும்’’ என உற்சாகமாக பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com