மதுரையிலுள்ள தேவர் - மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மதுரையிலுள்ள தேவர் - மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மதுரையிலுள்ள தேவர்  - மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி, அவரது 59வது குரு பூஜையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க பசும்பொன் செல்லும்வழியில் மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக நேற்றைய தினம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விரைவில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com