அச்சுறுத்தும் ஒமைக்ரான்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - முதலமைச்சர் இன்று ஆலோசனை

அச்சுறுத்தும் ஒமைக்ரான்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - முதலமைச்சர் இன்று ஆலோசனை
அச்சுறுத்தும் ஒமைக்ரான்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் தொடர்கிறது. வரும் 15ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், அதனை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வருகிறது.
எனவே தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகக் கவசம், தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றும் வகையிலான முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com