நூற்றாண்டு கடந்தும் நல்லகண்ணு மக்கள் பணியாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

நூற்றாண்டு கடந்தும் நல்லகண்ணு மக்கள் பணியாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
நூற்றாண்டு கடந்தும் நல்லகண்ணு மக்கள் பணியாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
நூற்றாண்டு கடந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பணி செய்ய வேண்டும் என நல்லக்கண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நல்லக்கண்ணு, தமது 97வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கட்சியின் அமைப்பு தினம் மற்றும் தோழர் நல்லுக்கண்ணுவின் பிறந்தநாள் விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நல்லக்கண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சுப்பராயன், சி.மகேந்திரன், வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவை இன்னும் இளைஞராகவே பார்ப்பதாகவும், மக்களுக்காக இன்றும் போராட்ட இயக்கத்தில் அவர் இருந்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com