அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - முதல்வர் உத்தரவு

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - முதல்வர் உத்தரவு
அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து - முதல்வர் உத்தரவு

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் கைவிடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்துசெய்ய முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் விஜயகாந்த், பிரேமலதா, ஈவிகேஸ் இளங்கோவன், நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, விஜயதரணி, ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.எம்.நாசர், கனிமொழி, தயாநிதி மாறன், அறப்போர் ஜெயராமன், கணேசன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்வதாக ஏற்கெனவே முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com