அரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி!

அரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி!
அரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணி தனது உடமைகளை மாற்றத் தொடங்கியுள்ளார்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

இதன் காரணமாக அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை. கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருப்பார் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணி தனது உடமைகளை மாற்றத் தொடங்கியுள்ளார். மேகாலயாவிற்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அதனை எதிர்பார்த்து உடமைகளை மாற்றம் செய்வதாக தெரிகிறது. வெளியான தகவலின்படி, 

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்திலிருந்து தனது உடைமைகளை அவர் மாற்றி வருவதாகவும், ராஜினாமா கடிதத்தை அனுப்பினாலும், குடியரசுத் தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகாத நிலையில் அவர் தனது இல்லத்தை காலிசெய்யமால் இருந்து வருகிறார். ராஜினாமா செய்து வெளிநடப்பு செய்வது பொருத்தமானதாக இருக்காது என்பதால் அவர் குடியரசுத் தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com