தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்.. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக-பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 25ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய வரவாக வருகை தந்திருக்கும் தவெக கட்சி கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என அறிவித்தபோதும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. அதேபோல ஆளுங்கட்சியான திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கும் அதிமுக, பாஜக, பாமக அன்புமணி தரப்பு, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் இணைத்துள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் வழக்கம் போல தனித்து நிற்கும் முடிவில் இருக்கிறது. இந்தசூழலில் இந்த மாதம் இறுதியில் தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தலுக்கான தேதியை உறுதிசெய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய தலைமைதேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
25ஆம் தேதி சென்னை வரும் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல்ஆணையர்கள் குழு, அடுத்தடுத்த நாட்களில் மாநில தேர்தல் அதிகாரிஉள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பல்வேறு துறைஅலுவலர்கள், மாவட்ட தலைமை தேர்தல்அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுடன், தனித்தனியே ஆலோசனை நடத்துகிறது.
இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்தேதி, மார்ச் மாதத்தின் முதல் வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

