சதமடித்த பெட்ரோல் விலை: இது மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை - ப.சிதம்பரம்

சதமடித்த பெட்ரோல் விலை: இது மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை - ப.சிதம்பரம்
சதமடித்த பெட்ரோல் விலை: இது மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை - ப.சிதம்பரம்
'இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது' என விமர்சித்துள்ளார் ப.சிதம்பரம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், ''உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயை தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை. இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்'' என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசு விலை உயர்ந்து 99 ரூபாய் 19 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் ஒரு லிட்டர் 34 காசு விலை அதிகரித்து 93 ரூபாய் 23 காசுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com