மருத்துவ மாணவர்கள் 3 ‌நாட்களாக உண்ணாவிரதம்

மருத்துவ மாணவர்கள் 3 ‌நாட்களாக உண்ணாவிரதம்
மருத்துவ மாணவர்கள் 3 ‌நாட்களாக உண்ணாவிரதம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை‌, அரசே நடத்த வேண்டும் என்று அக்கல்லூரி மாணவர்கள் 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடலூர் சிதரம்பம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக நடைபெறவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கடந்த மாதம் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com