பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி: ஆர்வமாக பங்கேற்ற போட்டியாளர்கள்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி: ஆர்வமாக பங்கேற்ற போட்டியாளர்கள்
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி: ஆர்வமாக பங்கேற்ற போட்டியாளர்கள்

சென்னையில் எக்ஸ்னோரா அடையாறு மகளிர் பிரிவு மற்றும் தர்ஷினி இயக்கத்தினர் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.

அடையாறில் உள்ள இந்திராநகர் இளைஞர் விடுதியில் இந்த சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 18 வருடங்களாக செயல்பட்டு வரும் தர்ஷினி இயக்கம் இங்குள்ள மாணவர்களுக்கு சிறப்பான எழுத்து பயிற்சி, விளையாட்டு பயிற்சி, சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது. மேலும் இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான சதுரங்க போட்டிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சதுரங்க போட்டிகள் தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும், இது போன்ற போட்டிகளில் பங்குபெறுவது தங்களின் தன்னபிக்கையை அதிகப்படுத்துவதாகவும் இதில் பங்கு பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.   


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com