தேன் நிலவிற்கு சென்ற தம்பதி.. பாராக்ளைடிங் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு

தேன் நிலவிற்கு சென்ற தம்பதி.. பாராக்ளைடிங் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு
தேன் நிலவிற்கு சென்ற தம்பதி.. பாராக்ளைடிங் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு

தேன் நிலவிற்கு சென்ற இளைஞர் பாராக்ளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்‌னை அமைந்தகரையைச் சேர்ந்த அரவிந்த் என்‌பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிம்லாவுக்கு தேன் நிலவுக்கு சென்‌ற தம்பதி, அங்கு பாராக்ளைடிங் எனப்படும் பா‌‌ராசூட் சாகசத்தை தனித்தனியே மேற்கொண்டனர். முதலில் பாராக்ளைடிக் செய்த பிரீத்தி, பை‌லட் உதவியோடு‌ பத்திரமாக திரும்பியுள்ளார். அதன் பின்னர், அரவிந்த் பாராக்ளைடிங் செய்தபோது, காற்றின் வேகத்தில் பாராசூட்டின் கயிறு அறுந்துள்ளது. 

அரவிந்த் சென்ற பாராசூட் பலமணி நேரம் ஆகியும் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ப்ரீத்தி மற்ற பைலட்களிடம் நடந்ததை கூறியுள்ளார். சக பாராசூட் பைலட்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். அப்போதுதான் பாராசூட் விபத்திற்குள்ளானது தெரிய வந்துள்ளது. பின்னர் பள்ளத்தாக்கில் இருந்து அரவிந்த் உடல் கண்டெடுக்கப்பட்டது. அரவிந்துடன் சென்‌ற பைலட் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணம் நடந்து ஒரு வாரமே ஆன நிலையில் அரவிந்தின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com