ஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்!

ஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்!
ஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்!

ஜோலார்பேட்டையில் இருந்து முதல் கட்டமாக 10 மில்லியன் லிட்டர் காவேரி தண்ணீர் ஜூலை 7 ஆம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து 

ஜோலார்பேட்டையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான முதற்கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நீர் கொண்டுவருவதற்கான போதிய வேகன்களை ஒதுக்கக் கோரி, குடிநீர் வாரியம் அனுப்பிய கடிதத்துக்கு, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து முதல் கட்டமாக 10 மில்லியன் லிட்டர் காவேரி தண்ணீர் ஜூலை 7 ஆம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com