தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்: சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்: சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்: சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
Published on
சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்வே பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மற்றொரு வழித்தடமான சென்னை - கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை வழக்கம்போல நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com