சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியிலும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஹ்ரைன் நாட்டிலிருந்து சென்னை வரும் கல்ஃப் ஏர்வேஸ் விமானம் உட்பட நான்கு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

தவற விடாதீர்: கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்து விழுந்தன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com