கொரோனா தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் பொருட்டு நாளை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்புப்பணி தொடர்பாக சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தலைவர்களுடன் மேலும் ஒருவர் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.