சென்னை: சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சென்னை: சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுனர் வேனை ஓரமாக நிறுத்தி இறங்கி பார்த்தார். அப்போது வேனின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது தொடர்பாக தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ரமேஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் காரின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வேனை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவர், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வேன் மூலம் சப்ளை செய்தது தெரியவந்தது.

வழக்கம்போல் இன்று காலை காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு சிறிது தூரம் சென்றதும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த தீவிபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com