சென்னை: அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

சென்னை: அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சென்னை: அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

பூவிருந்தவல்லி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அடுத்தடுத்து லாரிகள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பூவிருந்தவல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், கிரேன் ஏற்றிவந்த ட்ரைலர் லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி, நின்றிருந்த லாரி மீது வேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன், பூவிருந்தவல்லி அருகே செந்நீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பீட்டர் ராஜ்குமார், ஆவடி அருகே பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com