சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி சடலமாக மீட்பு; விஷஊசி செலுத்தி தற்கொலை?

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி சடலமாக மீட்பு; விஷஊசி செலுத்தி தற்கொலை?
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி சடலமாக மீட்பு; விஷஊசி செலுத்தி தற்கொலை?

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பட்டம் படிக்கும் மாணவி, இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விஷஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்தவர் சோபியா (27). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பட்டப் படிப்பு (மயக்கவியல் நிபுணர்) படித்து வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று இவர் வகுப்பிற்குச் செல்லவில்லை. அறை கதவுகளும் திறக்கப்படவில்லை. உடன் படிக்கும் மாணவிகள் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சோபியா இறந்த நிலையில் கிடந்தார். அருகில் விஷஊசி இருந்ததால் அவர் தனக்குத்தானே விஷ ஊசி செலுத்திக்கொண்டு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சக மாணவிகள் இது தொடர்பாக மருத்துவமனை டீன் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், மாணவி சோபியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாணவியின் அறையில் சோதனை நடத்தி செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்து வருகின்றனர். சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com