சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து மக்களைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம்

சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து மக்களைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம்
சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து மக்களைக் காக்க  சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது "தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு மருத்துவ முகாம்கள் நடப்பது இதுதான் முதன்முறை. மழைக்காலங்களில் மக்களுக்கு இயற்கையாக வரும் நோய்களான காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, சேற்றுப்புண் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து மக்களை காப்பதற்காக இந்த முகாம்கள் இன்று நடத்தப்பட்டுள்ளது. குடிசை பகுதியில் வெள்ளம் தேங்கிய இடங்களில் குடும்பத்திற்கு அரைக்கிலோ அளவில் பிளிச்சிங் பவுடர் கொடுக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com