\
வெளிச்சம் குறைவு...சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி நிறுத்தம்

வெளிச்சம் குறைவு...சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி நிறுத்தம்

வெளிச்சம் குறைவு...சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி நிறுத்தம்
Published on

குறைந்த வெளிச்சம் காரணமாக சென்னை சில்க்ஸ் கட்டடத்தை 4-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 

நாளை காலை முதல் மீண்டும் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்படும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன் பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. அதன் பின் முனைப்பகுதியை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துணிக்கடையில் இருந்த பயன்படுத்தப்பட்ட பொருட்களை வெளியே எடுக்க முடியாததால், அவை கட்டடத்திற்குள் இருக்கும் நிலையிலேயே இடிப்புப் பணி மேற்கொள்ளப்ப்டடது. இந்நிலையில், கட்டடத்தின் மேல் பகுதியில் நீர் சுத்திகரிப்பு ராட்சத இயந்திரம் உள்ளது. கட்டடத்தை இடிக்கும் போது அந்த நீர் சுத்திகரிப்பு ராட்சத இயந்திரம் கீழே விழும் அபாயம் உள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com