காவலர் தற்கொலை காரணம் என்ன? தீவிரமடையும் விசாரணை!

காவலர் தற்கொலை காரணம் என்ன? தீவிரமடையும் விசாரணை!
காவலர் தற்கொலை காரணம் என்ன? தீவிரமடையும் விசாரணை!

சென்னை‌யில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சென்னை கொருக்குப்பே‌ட்டை காவல்நிலைய ‌சிறப்பு  உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜோசப். ‌54 வயதான ஜோசப், காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காசிமேடு காவல்துறையினர், ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனு‌ப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சொந்த பிரச்னை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஜோசப்பிற்கு சாந்தி என்ற மனைவியும், அனிதா, ஜான்சி என்ற இரு மகள்களும் உள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த இவர், தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com