குடும்பப் பிரச்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விபரீத முடிவு

குடும்பப் பிரச்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விபரீத முடிவு
குடும்பப் பிரச்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விபரீத முடிவு

குடும்பப் பிரச்னையால் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மின் விசிறியில் படுக்கை விரிப்பால் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த சங்கர், அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இவருக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். இவரது ஐஏஎஸ் அகாடமியில் இருந்து 900க்கும் மேற்பட்டவர்கள் சிவில் சர்வீஸில் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சங்கர், நேற்று இரவு மது அருந்திவிட்டு பிரச்னை தொடர்பாக நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர் மனவிரக்தியில், வீட்டிலிருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பால் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர், உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com