நண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்!

நண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்!
நண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்!

சென்னையில் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கலியமூர்த்தி. கடந்த 16ம் தேதி நண்பர்களுடன் காரில் சென்ற கலியமூர்த்தி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கலியமூர்த்தியின் நண்பர்களான சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகவேலிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தொழில் ரீதியாக கடந்த 16-ம் தேதி கலியமூர்த்தியை அவரது நண்பர்களான செந்தில் மற்றும் முருகவேல் உட்பட 6 பேர், காஞ்சிபுரம் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக கலியமூர்த்தியை அடித்துக் கொன்ற 6 பேரும், அவரது உடலை காஞ்சிபுரம் அருகே வீசி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் செந்தில் மற்றும் முருகவேலை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com