சென்னை: நீர் பிடிப்பு பகுதியில் மழை: புழல் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: நீர் பிடிப்பு பகுதியில் மழை: புழல் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு
சென்னை: நீர் பிடிப்பு பகுதியில் மழை: புழல் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2829 மில்லியன் கன அடியும், மொத்த உயரமான 21.20 அடியில் தற்போது, 19.08 அடியும் நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், புழல் ஏரியில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 500 கனஅடி என்ற வீதத்தில் திறக்கப்பட்ட உபரி நீர், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக புழல் ஏரிக்கு விநாடிக்கு 1500 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனையடுத்து உபரி நீர் திறப்பு 500 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com