சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி, மதுபான பார்களை நாளை இரவு 10மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது
ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி, மதுபான பார்களை நாளை இரவு 10மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ''மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும். பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும். சென்னையில் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படும். உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை'' என அறிவித்துள்ளது.