தற்கொலைக்கு முயன்ற நபர்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

தற்கொலைக்கு முயன்ற நபர்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
தற்கொலைக்கு முயன்ற நபர்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை கார‌ணமாக தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற கணவரை காப்பாற்றிய காவலர்களை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா கடந்த 8-ஆம் தேதி மதுபோதையில் மனைவியுடன்‌ தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால், அவரது மனைவி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ரோந்துப்பணியில் இருந்த தலைமைக் காவலர் சரவணன், ‘ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பிரிவைச் சேர்ந்த பாபு ஆகியோர் அங்கு சென்றனர்.

அப்போது அறையில் சிவா‌ தூக்கில் தொங்கியதை ஜன்னல் வழியாக பார்த்த காவலர்கள், அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்‌. அவரை‌ உடனடியாக கீழே இறக்கி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை காப்பாற்றிய தலைமைக்காவலர் சரவணன் உள்பட இருவரையும் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com