பேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்

பேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்

பேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்
Published on

சென்னையில் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய 17 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

சென்னை ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூ அருகே உள்ள பூங்காவிலிருந்து சென்னை மாநகராட்சி பேருந்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் நின்று கூச்சலிட்டவாறும், படியில் தொங்கிக்கொண்டும் வந்தனர். 

இதனால் புல்லா அவென்யூ சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் வருவதைக் கண்ட மாணவர்கள் தப்பியோடினர். அதேபோல், ராயப்பேட்டையில் பிராட்வே - மந்தைவெளி இடையேயான 21 பேருந்திலும் ‘பஸ் டே’ கொண்டாடப்பட்டது. 

படிகளில் தொங்கியடியும், மேற்கூரையில் ஏறியும் மாணவர்கள் சிலர் ஆட்டமாடினர். நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம் ஆர்.டி.ஓ பஸ் நிலையத்தில் பேருந்து தினம் கொண்டாடுவதற்காக பேனருடன் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்த 4 மாணவர்களை பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வாறு மொத்தம் 17 மாணவர்களை பிடித்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பேருந்து தினம் கொண்டாட தடை உள்ள நிலையில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com