சென்னை: தடையை மீறி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மக்கள்!

சென்னை: தடையை மீறி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மக்கள்!
சென்னை: தடையை மீறி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மக்கள்!

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வரும் நிலையில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்தனர். ஆனால் இவர்கள் எந்தவித கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றவில்லை.

இங்கு நாள் ஒன்றுக்கு 200-டன் மீன்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் மொத்த, சில்லரை வியாபாரிகள் குவிந்ததால் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com